ஜெயாவுக்கு ராமதாஸ், வைகோ, பசி கண்டனம்
டெல்லி:
![]() |
| அழவும் திராணியின்றி.. தவித்து நிற்கும் பெண் |
சென்னை வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகஅரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ்:
அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதையே எம்ஜிஆர் நகர் கூட்ட நெரிசல் சம்பவம் காட்டுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
கூட்ட நெரிசலில் காயமடைந்து அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு,ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
![]() |
| மிதிபட்டு இறந்த தாயின் உடல் ஏந்தி |
இந்தத் துயர சம்பவத்திற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். எல்லா விஷயத்திலும் ஆளும் கட்சி ஆதாயம் தேட முயல்வதுதான் எல்லா குளறுபடிகளுக்கும் காரணம்.
மத்திய அரசு வழங்கிய பணத்தை கட்சிப் பணம் போல் பொறுப்பற்ற முறையில் வழங்கியதால் தான் இந்த துயர சம்பவம் நடந்தது.இதற்கு பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்றார்.
வைகோ:
![]() |
| அரசு மருத்துவமனையில் கிடக்கும் பிணங்கள் |
இந்த உயிர் பலிகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ஏற்கனவே வியாசர்பாடியில் இதே போன்றுசம்பவம் நடந்த பிறகும் கூட அரசாங்கம் குறிப்பாக காவல்துறை பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
மூன்று, நான்கு மையங்களில் கொடுக்க வேண்டிய நிவாரண உதவியை ஒரே மையத்தில் கொடுத்துள்ளனர். இதனால் இந்த துயரசம்பவம் அரங்கேறிவிட்டது. தலைநகரத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கும், இப்படிப்பட்ட சம்பவத்தை தடுக்கதவறியதற்கும், காவல்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
![]() |
| அந்த பள்ளிக் கூடத்தின் வாசல் |
கடமை தவறிய காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யவேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
சிதம்பரம்:
இந்த சம்பவம் குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் நிறை குறைகளுக்குமாநில அரசு தான் முழுப் பொறுப்பு என்றார்.
சென்னை வெள்ள நிவாரண முகாம் நெரிசலில் சிக்கி 42 பேர் பலி
















Click it and Unblock the Notifications