கடலூர்- நெல்லூர் இடையே கரை கடக்கும் புயல்
சென்னை:
![]() |
| இன்று அதிகாலை 3 மணிக்கு இன்சாட் செயற்கைக் கோள் எடுத்த படம் |
மாலா புயல் வலுவிழந்த நிலையில் நாளை இரவு கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையை கரையைக் கடக்கும் என வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள இந்தப் புயல் கடலூருக்கு அருகே கிழக்கு தென் கிழக்கில் 300 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.இப்புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் கன மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் 50 முதல் 60 கிமீ வேகத்திற்கு அடுத்த 36 மணி நேரத்திற்குதமிழக வட கடலோரம் மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுமையம் இன்று காலை தெரிவித்திருந்தது.
ஆனால், எதிர்பார்த்தபடி இன்று இரவு புயல் கரையைக் கடக்காது என்றும், நாளை இரவுதான் அது கடலூருக்கும், நெல்லூருக்கும்இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலூர் உள்பட சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள்கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
கன மழை மற்றும் புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களில்உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் இன்று தொடங்குவதாக இருந்த அரையாண்டுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டு இன்று தொடங்குவதாக இருந்த அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications