For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிவாரண உதவியில் காசு திண்ணும் போலீசார்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எம்.ஜி.ஆர். நகர் நெரிசல் சாவுகள் சம்பவத்திற்கு முக்கியக் காரணம் போலீஸார்தான் என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் அனைவரும் கூண்டோடு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

5,000 பேர் வரை பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் அங்கு பாதுகாப்புக்காக வெறும் 4 போலீசார் தான் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கூட்டத்தினர் முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டபோது அதை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் சேரத் தொடங்கியவுடனேயே அதைக்கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது கலைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ப் பலி நேர்ந்திருக்காது என்பது பொது மக்கள்தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு.

எம்.ஜி.ஆர். நகரில் காவல் நிலையம் தொடங்கப்பட்டு 4 மாதங்களே ஆகிறது. இந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவருமே கடற்கரை சீரணி அரங்க காவல்நிலையத்தில் பணியாற்றியவர்கள்.

சீரணி அரங்க காவல் நிலையம் கலைக்கப்பட்ட பின்னர் அனைவரும் இங்கு மாற்றப்பட்டனர்.

தற்போது எம்.ஜ.ஆர். நகர் மக்கள் மத்தியில் காவல்துறை மீது கடும் அதிருப்தி நிலவுவதால் துணை ஆணையர் முதல் கடை நிலை காவலர் வரை அத்தனை பேருமேகூண்டோடு மாற்றப்படலாம் என ஒரு பேச்சு நிலவுகிறது.

வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்களை சென்னை நகர போலீஸார் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதாக புதிய புகார் எழுந்துள்ளது. ஒருடோக்கனுக்கு குறைந்தது ரூ. 100 முதல் 500 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு அவர்கள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X