For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவொற்றியூரில் கடல் சீற்றம்: ஊருக்குள் தண்ணீர்

By Staff
Google Oneindia Tamil News

திருவொற்றியூர்:

திருவொற்றியூரில் புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் அவசரமாகமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அலையின்சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் நெட்டுக்குப்பம் வரையுள்ள கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலைசீறிப்பாய்ந்து தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரை வந்து சென்றது.

இதே போல் சின்னகுப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம் ஆகிய இடங்களிலும் கடல் அலை தடுப்பு சுவரை தாண்டிசீறிப்பாய்ந்தது. இதனால் அன்னை சிவகாமி நகருக்குள் கடல் நீர் 100 மீட்டர் தூரத்திற்கு புகுந்ததால் தெருக்களில் முழுங்கால்அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினார்கள். இதே போல் எண்ணூர் இந்திராகாந்தி குப்பம்,நெட்டுக்குப்பம் பகுதியிலும் கடல்நீர் 100 மீட்டர் தூரத்திற்கு உள்ளே புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் வீடுகளை விட்டுவெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X