புரளி கிளப்பியதாக திமுக கவுன்சிலர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வெள்ள நிவாரண கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுகவை சேர்ந்த மாநகராட்சிகவுன்சிலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.திமுகவை சேர்ந்த கவுன்சிலர் தனசேகரன் என்பவர் எம்ஜிஆர் நகர் நிவாரண முகாமில் வேண்டுமென்றே வதந்தியை கிளப்பிவிட்டு42 பேர் பலியாவதற்கு காரணமாக இருந்துள்ளார் என்று அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சி குழுக் கூட்டம் இன்று அண்ணாஅறிவாலயத்தில் அவசரமாக கூட்டப்பட்டது. அதில் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர் தனசேகரனை போலீஸ்கைது செய்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த கைது சம்பவம் குறித்து கூறிய கருணாநிதி, இது திமுக மீது அதிமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டுபழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதையே காட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications