ஜனவரியில் மத்திய அமைச்சரவை மாற்றம்
டெல்லி:
மத்திய அமைச்சரவை ஜனவரி மாதத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் குறித்து அடிக்கடி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில்நடைமுறைப்படுத்தப்படாமல் தள்ளி போகிறது. இருந்தாலும் இந்த முறை, மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகவேஇருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஏனென்றால் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலர் அதில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது 7 இடங்கள் அமைச்சரவையில்காலியாக உள்ளன. ஏற்கனவே சிபுசோரன், ஜெகதீஷ் டைட்லர், குலாம்நபி ஆசாத், ஜெய்பிரகாஷ் நாராயண யாதவ் ஆகியோர்பதவி விலகியதாலும், சுனில் தத், சயீத் மரணம் அடைந்ததாலும் அந்த இடங்கள் காலியாக உள்ளன.
எனவே அமைச்சரவையில் புதிய நபர்களை சேர்க்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில அமைச்சர்கள்செயல்பாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திருப்தி இல்லாததால் அவர்களை நீக்கி விட்டு புதியவர்களை சேர்க்க திட்டமிட்டுஉள்ளார்.
அவற்றுடன் 7 காலியான இடங்களையும் சேர்த்து விரிவான மாற்றத்தை அமைச்சரவையில் செய்ய அவர் முடிவெடுத்துள்ளதாகதெரிகிறது. இது தொடர்பாக மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் நேற்று ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்என தெரிகிறது. ஜனவரி முதல் வாரத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம்.
அமைச்சரவையில் தற்போது முஸ்லீம்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை. ஏற்கனவே இருந்த குலாம் நபி ஆசாத் காஷ்மீர்முதலமைச்சராகி விட்டார். முகமது சயீத் மரணமடைந்துவிட்டார்.
தற்போது கேரளாவைச் சேர்ந்த அகமது மட்டுமே மத்திய அமைச்சராக உள்ளார்.
காங்கிரஸ் முஸ்லீம் முக்கிய புள்ளிகளான மோஷினா கித்வாய், ஏ.ஆர். அந்துலே, ஜாபர்ஷெரீப், சல்மான் குர்ஷீத் ஆகியோர்மத்திய அமைச்சரவையில் இடத்தை எதிர்பார்க்கின்றனர். இவர்களில் ஜாபர் ஷெரீபும், குர்ஷீத்தும் எம்பிகளாக இல்லை. கித்வாய்உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றாலும் சத்தீஷ்கரில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எனவே கித்வாய் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.