திருட்டு வழக்கு: ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில் நவரத்தின கற்கள் திருட்டு வழக்கில் ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.பெரியகுடி செளந்தரநாயகி உடனுறை ஸ்ரீஅகஸ்தீஸ்வரம் கோவிலில், பீடத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர,கோமேதக, மரகத கற்களை ஜெயேந்திரர் மருந்து சாத்துவதாக கூறி எடுத்துச் சென்றதாகவும், ஆனால் இதுவரை திருப்பித்தரவில்லை என்றும் கூறி அவர் மீது கோட்டூர் போலீஸ் நிலையத்தில், மன்னார்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற கிருஷ்ணன் புகார்கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்தவழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications