லாரிகள் மோதி தீ: டிரைவர் கருகி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தாம்பரம் அருகே இரண்டு லாரிகள் மோதிக் கொண்டு தீப் பிடித்ததில் ஒரு லாரியின் ஓட்டுனர் உயிரோடு எரிந்துசாம்பலானார்.கோயம்பேடு மொத்த மார்க்கெட்டுக்கு இரும்பு பாலங்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்னைக்கு வந்தது. தாம்பரம் அருகேஉள்ள கோவூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை அந்த லாரி வந்தபோது, எதிரே சென்னையிலிருந்து நெல் மூட்டைகளுடன்வந்த மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் இரும்பு பாலங்கள் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் பாபுவின் தலை துண்டானது. அதே நேரத்தில் லாரியின் டீசல் டேங்க்உடைந்து லாரி தீப்பிடித்துக் கொண்டது. அதில் பாபு உடல் கருகி இறந்தார்.
அந்த லாரியின் உரிமையாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. தாம்பரம் போலீஸார் சம்பவஇடத்திற்கு விரைந்து பாபுவின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications