ஜெ கொடும்பாவி எரிக்க முயன்ற 20 பேர் கைது
மதுரை:
மதுரை மற்றும் திருச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மக்கள் கலை இலக்கியகழகத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மற்றும் திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் திரண்டு, சென்னை வெள்ள நிவாரணநெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவம் மற்றும் வெள்ள நிவாரண உதவி வழங்குவதில் தமிழக அரசு காட்டி வரும்பாராபட்சத்தை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.மேலும் 42 பேர் பலியான சம்பவத்தில் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்வெள்ள நிவாரண உதவி குறித்து இன்றே கடைசி என்று புரளிகள் கிளப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்போராட்டத்தில் குதித்தனர்.
பிறகு மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த 3 உறுப்பினர்கள் முதலமைச்சர்ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது அவர்களை போலீசார் கைது செய்தனர். இதே போல் திருச்சியில்ஜெயலலிதா உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுகவை சேர்ந்த 150 உறுப்பினர்கள் சென்னைஉயிர்ப் பலிகள் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து அமைதி ஊர்வலம் நடத்தினர்.