மலேசியா செல்ல இன்டெர்நெட்டில் விசா
கோலாலம்பூர்:
இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு செல்பவர்களும் தற்காலிக வேலைக்கு செல்பவர்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல்இணையத் தளத்தில் விண்ணப்பித்து விசா பெற்றுக் கொள்ளலாம் என்று மலேசியத் துணை பிரதமர் நஜீப் ரஜாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் இருந்து மலேசியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் தற்போது விசா வழங்கப்பட்டுவருகிறது. இனிமேல் இணையத் தளம் மூலமாகவும் இவர்கள் விசா பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,15,000 இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியாவிற்கு வந்து சென்றுள்ளனர்.மேலும் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகப்படுத்த வெளிநாட்டு மாணவர்களை சுற்றுலா வழி காட்டிகளாக பணி செய்யஅனுமதித்துள்ளோம் என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் லியோ மைக்கேல் கூறியதாவது:
அராபி, ஸ்பேனிஸ், கொரியா, பிரெஞ்சு, ரஷ்ய மொழிகள் தெரிந்த இளைஞர்களை தற்காலிக சுற்றுலா வழிகாட்டிகளாகபணியாற்ற மலேசிய அரசு வரவேற்கிறது. தற்போது விமான நிலையத்தில் அராபி, மாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தகவல்அறிவிப்பு செய்து வருகிறோம்.
தற்போது மலேசியாவிற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் ஹாங்காங், சீனா, தைவான் ஆகிய நாட்டினரும் சுற்றுலாபயணிகளாக வருவது அதிகரித்துள்ளதால் அவர்கள் நலனுக்காக பல்வேறு மொழிகள் தெரிந்த அறிவிப்பாளர்கள்தேவைப்படுகிறார்கள் என்றார்.