உயிர் பலிகள்: ஜெ. அரசுக்கு சோனியா அறிவுரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
42 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் நீதிவிசாரணை மூலம் தமிழக அரசு உரியபாடம் கற்றுக் கொண்டு சிறந்த நிர்வாகத்தை வழங்கும் என நம்புவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளள்.இந்தச் சம்பவம் தொடர்பாக இரங்கல் வெளியிட்ட சோனியா,
இந்த நெரிசல் உயிர்ப் பலிகள் பெரும் துக்கத்தை ஏற்படுத்திவிட்டது. மனதை உடைத்துவிட்ட இச் சம்பவம்தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு துயரம் தான். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இச் சம்பவம் குறித்து நீதி விசாரணை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவு மூலம் தமிழக அரசு சிறந்தநிர்வாகத்தையும், பொறுப்பான அரசையும் வழங்கும் என நம்புகிறேன். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பது தவிர்க்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications