ஜாதிகளை ஆதரிக்கும் விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

கோவை:

வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் தனித் தனியாக போட்டியிடத் தயாரா என்று தேசியமுற்போக்கு திராவிட கழகத் தலைவரான நடிகர் விஜயகாந்த் சினிமா பாணியில் சவால் விட்டுள்ளார்.

கோவை சிவானந்தா காலனியில் விஜயகாந்த் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அவர் பேசுகையில், நான் அரசியலுக்குவரும் வரை என்னை நல்லவர் என்று பலரும் போற்றினர், ஆனால் அரசியலுக்கு வந்து விட்டதால் என்னைக் கெட்டவன் என்றுதூற்றுகிறார்கள். இதனால் நான் கவலைப்படவில்லை.

வரும் சட்டசபைத் தேர்தலில் நான் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப போகிறேன். இங்கே பல கட்சிகள் கூட்டணிஅமைக்க மும்முரமாக உள்ளன. நான் சின்னப் பையன்தான். எனக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். அப்படிக் கூறுபவர்களைப்பார்த்துக் கேட்கிறேன்.

நான் தனித்து நிற்பதைப் போல நீங்களும் தனித்து நிற்கத் தயாரா? எனக்கு சக்தி இருக்கிறது, தனியாக போட்டியிடுகிறேன்.நீங்களும் உங்களது சக்தியை நிரூபிக்க தனியாக போட்டியிடுங்கள் பார்க்கலாம்.

லஞ்சம் கொடுப்பதை ஆரம்பித்து வைத்தது பணக்காரர்கள்தான். லஞ்சத்தை ஒழிக்க முடியும். முடியாதது என்று எதுவுமே இல்லை.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இந்திய அளவில் சரியான அங்கீகாரம்கிடைப்பதில்லை. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் சரியானஅங்கீகாரம் கிடைப்பதில்லை. காரணம் விளையாட்டிலும் அரசியல்.

சாதியை நான் மதிக்கிறேன். ஆனால் அதை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+