For Daily Alerts
Just In
குஷ்புவுக்கு ஆதரவு: இளங்கோவன் மீது வழக்கு
சென்னை:
கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு ஆதரவாக பேசியதாக மத்திய அமைச்சர் இளங்கோவன் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகன் என்பவர், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 4ம் தேதி சென்னையில் நடந்த சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில்பேசும் போது திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி குஷ்பு யதார்த்தமாக கூறிய கருத்துக்கு எதிராக சிலர்வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
99 சதவீத ஆண்கள், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். இதனால் பெண்கள் கற்புக்கரசிகளாக இருக்கமுடியுமா? என்று பேசியுள்ளார்.
இது தமிழர்களை அவமதிப்பதாக உள்ளது. இளங்கோவன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமனுவில் கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, December 21, 2005, 5:30 [IST]