42 பேர் பலியான பள்ளியில் யாகம்!!
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் பரிதாபமாக பலியான பள்ளி வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. காரணம்,ஆவிகளை விரட்டுவதற்காம்.
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில் உள்ள அறிஞர் அண்ணா மாநகராட்சிப் பள்ளியில் கடந்த 19ம் தேதி அதிகாலை நடந்தகூட்ட நெரிசலில் சிக்கி வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்த அப்பாவிப் பொது மக்கள் 42 பேர் பரிதாபமாக இறந்தனர்.இச் சம்பவம் நடந்து 3 நாட்களாகி விட்ட நிலையில் இப்பள்ளி வளாகத்தில் ஆவிகள் நடமாடுவதாக சிலர் புரளி கிளப்பிவிட்டுள்ளனர். இந்தப் புரளியால், அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களும், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரும்பீதியடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை பள்ளி திறந்து அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கின. பள்ளிக்குச் சென்ற மாணவ, மாணவியர் 42பேரின் உயிரைப் பலி வாங்கிய பள்ளி நுழைவாயிலை நெருங்கியதும், ஆவி பீதியால் நடுங்கினர். பல பெற்றோர்களும்குழந்தைகளை உள்ளே அனுப்பப் பயந்தனர்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூடிப் பேசி ஆவிகளை விரட்ட தர்ப்பண யாகம் நடத்தமுடிவு செய்யப்பட்டது. உடனடியாக அய்யர் வரவழைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தின் நான்கு மூலைகள் மற்றும் நுழைவாயில் ஆகிய இடங்களில் யாகம் நடத்தப்பட்டு பூசணிக்காய்உடைக்கப்பட்டது.
இதன் பின்னரே மாணவ, மாணவியர் பள்ளிக்குள் நுழைந்தனர். இதற்கிடையே, சம்பவம் நடந்த நுழைவாயிலை மூடி விடவேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நுழைவாயில் ராசியில்லை என்று கூறிய அவர்கள், இதற்குப் பதிலாக நீண்ட காலமாக மூடி வைக்கப்பட்டுள்ள இன்னொருநுழைவாயிலை திறந்து விடுமாறு தலைமை ஆசிரியரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இவர்களை என்னவென்று சொல்வது...












Click it and Unblock the Notifications