போலீஸ் கமிஷ்னர் நடராஜுக்கு திமுக நோட்டீஸ்
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி திமுக சார்பில்அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சார்பில் இதுதொடர்பாக வழக்கறிஞர் ரவீந்திரன், நடராஜுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்விவரம்:கடந்த 21ம் தேதி வெளியான நாளிதழ் ஒன்றில் தாங்கள் கூறியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதில், எம்.ஜி.ஆர். நகரில் கடந்த 18ம் தேதி நிவாரண உதவி வாங்க காத்து இருந்த மக்களோடு, நூற்றுக்கணக்கான திமுகவினரும்கலந்து நின்றதாகவும், நிவாரணம் பெறுவதற்கு இதுதான் கடைசி நாள், முதலில் செல்வோருக்குத்தான் உதவி கிடைக்கும் என்றுதிமுகவினர் புரளி கிளப்பி விட்டதாகவும் கூறியுள்ளீர்கள்.
இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். உங்கள் தலைமையிலான போலீஸார் செய்த தவறுகளை மறைப்பதற்காகவும்,ஆளுங்கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடித்தருவதற்காகவும் இதுபோன்ற செயலில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.
மக்களைக் காக்கும் பணி தொடர்பாக உங்களுக்கு அளிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அந்தஸ்தை மறந்து நீங்கள் செயல்பட்டுஇருக்கிறீர்கள். இந்த சம்பவத்தில் 42 பேர் இறந்ததற்குக் காரணமே போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம்தான்.
உங்களது கவனக்குறைவால் உங்கள் தலைக்கு கத்தி வந்து விடுமோ என்றும், மரியாதை இல்லாத ஒரு பதவிக்கு நீங்கள் மாற்றம்செய்யப்பட்டு விடுவீர்களோ என்று பயந்தும் உள் நோக்கத்தோடு ஆதாரமற்ற செய்தியைக் கூறி இருக்கிறீர்கள்.
நீங்கள் கூறியதைப் பார்க்கும்போது உங்கள் விசாரணை நியாயத்தில் இருந்து வழி தவறிச் செல்லும் என்று தெள்ளத் தெளிவாகவேதெரிகிறது. சம்பவம் குறித்து அறிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் பேசியிருப்பது அதிகாரவரம்பை மீறிய செயலாகும்.
எனவே நீங்கள் கொடுத்த தவறான பேட்டியைத் திரும்பப் பெற வேண்டும். 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு திமுக அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நட்ராஜ் மீது பிரதமர் அல்லது உள்துறை அமைச்சரிடம் புகார் தர திமுக கூட்டணி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications