For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி: அதிமுகவினர் மீது பாயும் வழக்குகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலி வாக்காளர்களைச் சேர்க்க விண்ணப்பம் கொடுத்தவர்கள் (அதிமுகவினர்), விண்ணப்பத்தில் கையெழுத்துப்போட்டிருந்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

போலி வாக்காளர் விண்ணப்பங்களை ஒட்டுமொத்தமாக அளித்தவர்கள் மீது நடவடிககை எடுக்கக் கூடாது என்று தேர்தல்ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்தவழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து விட்டது.

இதையடுத்து சுமார் 13 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்த அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிக்கலில் மாட்டவுள்ளனர்.

இந் நிலையில் மத்திய தேர்தல் ஆணையம் மிக வேகமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. போலி வாக்காளர்விண்ணப்பங்களைக் கொடுத்தவர்கள், அதில் கையெழுத்துப் போட்டிருந்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையைதொடங்குமாறு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் நரேஷ் குப்தா இதுவரை வேகம் காட்டாமல் இருந்து வருகிறார். ஆனால், உயர் நீதிமன்றம் அதிமுகவின்மனுவை தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையமும் நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளதால் அதிமுகவினர்மீது நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

தாமதமின்றி தவறு செய்தவர்கள் மீது வழக்குகளைப் போடுமாறு அவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நரேஷ் குப்தாவுக்கு உதவ, மத்திய துணைத் தேர்தல் ஆணையர் அனந்தகுமார் சென்னைக்கு வரவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X