வெற்றிகரமாய் விண்ணில் பாயந்தது இன்சாட்-4ஏ
பெங்களூர் :
![]() |
பிரஞ்சு கயானாவில் உள்ள கெளரெள விண்வெளித் தளத்திலிருந்து 3,080 கிலோ எடை கொண்ட இன்சாட்-4ஏ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஐரோப்பாவின் ஏரியன்-5 ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது.
அடு"தத 20வது நிமிடத்தில் குறிப்பிட்ட உயரத்தில் செயற்கைக் கோளை ராக்கெட் விண்ணில் செலுத்தியது.
இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர் கூறுகையில்,
தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள இன்சாட்-4ஏ என்ற செயற்கை கோளிலிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன்செயற்கைகோள் கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல்கள் வர ஆரம்பித்துவிட்டன. இன்சாட்-4ஏ நல்ல முறையில் செயல்பட்டுகொண்டிருக்கிறது.
இந்தியா தயாரித்த இந்த சக்தி வாய்ந்த, செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, இஸ்ரோவின் சரித்திரத்தில்முக்கிய நிகழ்ச்சியாகும்.
இந்த செயற்கைகோள் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கேபிள் இல்லாமல் நேரடியாக வீடுகளில் (ஈடிணூஞுஞிணா-ணாணி-ஏணிட்ஞு ணாஞுடூஞுதிடிண்டிணிணண்ஞுணூதிடிஞிஞுண்) பெறலாம். மற்றும் தொலைபேசி தகவல் தொடர்பை பெருமளவில் விரிவாக்கவும் இன்சாட் 4 ஏ பயன்படும்.
வரும் ஜனவரியில் இருந்து செயல்படும் இந்தச் செயற்கைக் கோள் 12 வருடங்கள் தனது சேவையை விண்ணிலிருந்து வழங்கும்.
இந்தச் செயற்கைக் கோள் ரூ. 300 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதை விண்ணில் ஏவ ஐரோப்பிய விண்வெளிமையத்துக்கு 50 மில்லியன் டாலர் தரப்பட்டது.













Click it and Unblock the Notifications