நீதிபதிகள் மீது லஞ்சப் புகார்: போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்குவதாக நீதிமன்ற வளாகத்திலேயே போஸ்டர் ஒட்டப்பட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த போஸ்டரில், தீர்ப்புக்கு ரூ. 75,000, மேல் முறையீட்டுக்கு ரூ. 60,000, தடை உத்தரவுக்கு ரூ.10,000 வாங்கப்படுவதாககூறப்பட்டிருந்தது.நீதிமன்ற வளாகம் தவிர புதுக்கோட்டை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில்போலீசாரால் கிழித்து எறியப்பட்டன.
இந்த நிலையில் நீதிபதி மீதான புகார் குறித்து சென்னையில் இருந்து நீதிமன்ற விஜிலன்ஸ் டிஎஸ்பி சந்திரமெளலியும் மற்றொருடிஎஸ்பியும் புதுக்கோட்டைக்கு வந்து விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்.
றந்தாங்கி நீதிபதி ஒருவர் மீதும் புகார் வந்ததால் அங்கும் சென்று விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications