சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் கோவை அருகேயுள்ள ஆர்.எஸ்.புரத்தில் 21 வயது வாலிபர் தனது பக்கத்து வீட்டில் வசித்த 5 வயதுசிறுமியிடம் சாக்லெக் கொடுத்து விளையாட்டுக் காட்டுவது போல் அழைத்து சென்று மானபங்கம் செய்தார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த வாலிபரை போலீசார் கைது செய்து மகளிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மகளிர் நீதிமன்ற நீதிபதி கலாவதி அந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறையும் ரூ. 25,000அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications