For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நார்வேயில் பேச்சு நடத்த முடியாது: ராஜபக்ஷே

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

அமைதிப் பேச்சுவார்த்தையை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடத்தலாம் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையைஇலங்கை அதிபர் மகந்தா ராஜபக்ஷே நிராகரித்துவிட்டார்.

பேச்சுவார்த்தைகளை ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் நடத்தலாம் என ராஜபக்ஷே கூறி வருகிறார். ஆனால், ஆசியாவில்நடத்தலாம் என்ற அதிபரின் கருத்தில் உள் நோக்கமும் சதியும் இருப்பதாக புலிகள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் புலிகள்ன் கோரிக்கையை நிராகரித்து ராஜபக்ஷே நிருபர்களிடம் கூறுகையில்,

ஓஸ்லோவுக்குச் செல்லலாம் என்பதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் எங்களது நிலையில் மாற்றம் ஏதும்இல்லை. ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் பேச்சு நடத்தலாம். தனது நாட்டில் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளுமாறுஜப்பான் கூறியுள்ளது. அதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், சிலருக்கு இன்னும் மேற்கத்திய மோகம் பிடித்து ஆட்டுகிறது. இதனால் தான் ஓஸ்லோ செல்வோம் என்கிறார்கள். இதைபுலிகளும் ஒப்புக் கொள்வார்கள் என்று கருதுகிறேன். இதனால் ஆசியாவில் ஏதாவது ஒரு நாட்டில் பேச்சு நடத்தலாம் என்றார்ராஜபக்ஷே.

இதற்கிடையே அமைதி முயற்சிகளில் நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம் தலையிடுவதை ராஜபக்ஷே விரும்பவில்லை என்றுசெய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதை அவர் ராஜபக்ஷே மறுத்துள்ளார். தனிப்பட்ட நபர்கள் குறித்து எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X