பேசின்பிரிட்ஜ்-எண்ணூர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பேசின் பிரிட்ஜ்-எண்ணூர் 200 அடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

சென்னை காலடிப்பேட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைதொடுத்துள்ளார். அந்த மனுவில் பேசின்பிரிட்ஜ்-எண்ணூர் 200 அடி சாலையில் உள்ள அன்னை கனகம்மாள் நகர், கலைஞர் நகர்,பாலகிருஷ்ணா நகர் பகுதியில் நிறைய ஆக்கிரமிப்புகள் செய்து வீடு கட்டியுள்ளனர். அதனால் போக்குவரத்து மிகவும்பாதிக்கப்படுகிறது.

காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக திருவள்ளூர் கலெக்டர், அம்பத்தூர் நகராட்சி ஆணையர் மற்றும் தாசில்தாருக்கு கொடுத்தமனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் எம்.ஜெயச்சந்திரன் அடங்கிய பெஞ்ச் 3மாதத்திற்குள் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+