நெரிசல் சாவுகள்: துணை கமிஷ்னரும் மாற்றம்
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெரிசல் பலிகள் விவகாரத்தில் கலெக்டர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது காவல்துறைதுணை ஆணையரும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிவாரண உதவி பெற வந்த பொது மக்களிடையே ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் இறந்தனர். இந்தச்சம்பவத்திற்கு அரசின் கவனக்குறைவும், காவல்துறையின் அலட்சியப் போக்குமே காரணம் என பரவலாக குற்றம் சாட்டப்பட்டுவருகிறது.ஆனால், திமுகவினர் மீது பழியைப் போட்டு வருகிறது அரசு.
இந் நிலையில், பொது மக்களிடையே நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி நிலவுவதை உளவுப் பிரிவு கண்டறிந்து அரசின்கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. இதையடுத்து மாவட்டக் கலெக்டர் சந்திரமோகன் மாற்றப்பட்டார். அவருக்கு பதவி ஏதும்தராமல் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
புதிய கலெக்டராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய போலீசாரின் அலட்சியப் போக்கே நெரிசல் பலிகளுக்கு முக்கியக் காரணம் என்றுபொது மக்களிடையே பேச்சு நிலவுகிறது.
இதையடுத்து அங்கு பணியாற்றும் அத்தனை போலீஸாரும் கூண்டோடு மாற்றப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆர். நகரை உள்ளடக்கிய தியாகராய நகர் துணை போலீஸ் கமிஷ்னர் சேஷசாயி (சில நாட்களுக்கு முன்புதான்இவர் இந்தப் பொறுப்புக்கு வந்தார்) மாற்றப்பட்டு கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தி.நகர் புதிய துணை ஆணையராக சிபிசிஐடி எஸ்பியான ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல பூக்கடை துணை கமிஷ்னராக இருந்து வந்த கார்த்திகேயன் மாற்றப்பட்டு கட்டாயக் காத்திருப்பில்வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய துணை ஆணையராக வட சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.