அமெரிக்கா அடித்து, சித்ரவதை: சதாம் புகார்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

அமெரிக்கப் படையினல் என்னை அடித்து சித்தரவதை செய்தனர். இதனால் உடல் முழுவதும் காயங்கள் உள்ளன என்று இராக்முன்னாள் அதிபர் சதாம் உசேன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

குர்திஷ் இன மக்களை கொன்று குவித்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சதாம் உசேன் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.

மேலும் 1982ம் ஆண்டு சதாம் உசேனை கொல்ல முயற்சி நடந்ததை தொடர்ந்து வடக்கு பாக்தாத் அருகே 148 பேரைக்கொன்றதாக சதாம் உசேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில், சதாம் நீதிமன்றத்தில் கூறியதாவது:

நான் காவலில் இருந்த போது அமெரிக்க படையினர் என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். என் உடம்பின் எல்லாஇடங்களிலும் அவர்கள் அடித்தனர். அந்தக் காயங்களின் வடுக்கள் என் உடலில் இன்னமும் உள்ளன. அமெரிக்க அரசு தான்எனக்கு எதிரியே தவிர, அமெரிக்கர்கள் அல்ல.

என் ஆட்சியில் சிலர் சித்ரவதைகளை அனுபவித்ததாக சாட்சி கூறினர். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எந்தஇராக்கியர் துன்பப்பட்டாலும் அது எனக்கு துயரத்தை அளிக்கும். அவர்களை யார் துன்புறுத்தினார்களோ அவர்களுக்குதண்டனை வழங்கிய தீர வேண்டும் என்றார் சதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+