ஓடும் ரயிலில் இருந்து 3 பேரை தூக்கி வீசிய கும்பல்: பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பியது
போபால்:
மும்பையில் இருந்து லக்னெள சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு ஒரு கும்பல் பயங்கர அராஜகம்செய்தது. ஆயுதங்கள் ஏறிய அந்தக் கும்பல் 3 பயணிகளை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு ஒரு பெண்ணைகற்பழித்தது.
போபாலுக்கு 60 கி.மீ. தொலைவில் விதிசா என்ற இடத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது இச் சம்பவம் நடந்தது.நள்ளிரவில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள்களுடன் போபாலில் அந்த ரயிலில் ஏறியது. அன்-ரிசர்வ்ட்கம்பார்ட்மெண்டில் ஏறிய அக் கும்பல் ரயில் புறப்பட்டவுடன் பயணிகளை அடித்து, உதைத்து நகை, பணத்தை பறிக்கஆரம்பித்தது. பெண்களிடம் அத்து மீறியது.
அதைத் தடுத்த 3 பயணிகளை அந்தக் கும்பல் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் ஜான்சிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 பேரை வெளியில் தூக்கிப் போட்ட அக் கும்பல், ஒரு பெண்ணை ரயிலின் கழிப்பறைக்குள் இழுத்துச் சென்று கற்பழித்தது.லலித்புட் ரயில் நிலையத்தை அந்த ரயில் நெருங்கியபோது அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்த அந்தக் கும்பல் ரயில்நின்றவுடன் தப்பியோடிவிட்டனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர்லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
ரயிலில் காவலுக்கு ரயில்வே போலீசார் துப்பாக்கிகளோடு திரிந்தாலும் அவர்களால் பெரும்பாலும் எந்தப் பயனும்இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications