குழந்தைகளை விற்ற 2 பெண் புரோக்கர்கள் கைது
திருச்சி:
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை விற்று வந்த 2 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசு பொது மருத்துவமனையில் பிரசவ வார்டில் தவறான உறவினால் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களிடமிருந்தும்,வறுமையால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளையும் விலை பேசி விற்று வரும் கொடுமை கடந்து 8 வருடங்களாகநடந்து வருகிறது.இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து திருச்சி நகர போலீஸ் கமிஷனர் பிரதீப் வி. பிலிப் இது குறித்துவிசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் விசாரணையில் முத்துடையான்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த அழகம்மாள் என்பவர் வறுமை காரணமாக தனக்குபிறந்த குழந்தையை இந்த பெண்களிடம் ரூ. 500க்கு விற்றது தெரிய வந்தது. மேலும் அவரை கட்டாயப்படுத்தியதால் தான் இந்தவிற்பனைக்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
இதே போல் அழகம்மாள் 8 வருடங்களுக்கு முன்பு தனக்கு பிறந்த ஆண் குழந்தையும் இதே புரோக்கர் பெண்கள் மூலமாகவிற்றுள்ளதும் தெரிய வந்தது.
இந்த 2 பெண் புரோக்கர்களும் சுமார் 8 வருடங்களாக குழந்தை விற்பனையை செய்து வந்துள்ளனர்.
ஆண் குழந்தைக்கு ரூ. 1,000மும், பெண் குழந்தைகளுக்கு ரூ. 500 பேரம் பேசி வாங்கி அவர்களை ரூ.10,000 முதல் ரூ.20,000வரை வெளியில் விற்று வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications