வெள்ள பாதிப்பு: கூடுதலாக 3 லிட்டர் கெரசின்: ஜெ
சென்னை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லா குடும்பங்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இம்மாதமும் தலா 3 லிட்டர்மண்ணெண்ணெய் கூடுதலாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் வழக்கமாகப் பெற்று வரும் மண்ணெண்ணெய்யுடன்2005 டிசம்பர், 2006 ஜனவரி ஆகிய 2 மாதங்களுக்குத் தலா 3 லிட்டர் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்ளலாம்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையாவது:
பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களில் விளக்கு ஏற்றுவதற்கும், சமையல் செய்வதற்கும் தேவையான மண்ணெண்ணெய்யைக்கூடுதலாக வழங்க வேண்டும் என வெள்ள நிவாரண உதவி கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தபோதுகேட்டேன்.
அதை ஏற்று ஏற்கனவே வழங்க உத்தரவிட்டிருந்த 10,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்யுடன் கூடுதலாக மேலும் 10,000கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு வழங்க கடந்த 16ம் தேதி பிரதமர் உத்தரவிட்டார்.
வெள்ள நிவாரணத்துக்காக 43,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையில் இதுவரை 20,000 கிலோ லிட்டர் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications