For Daily Alerts
Just In
சென்னை-மதுரை நீதிபதிகள் இடமாற்றம்
சென்னை:
சென்னை, மதுரை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாடு ஜூடிசியல் அகாடமியின் இயக்குனராக பணியாற்றி வந்த பெரியகருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வரும்அக்பர் அலி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னையில் அரசு சொத்தாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த துரைசாமி, மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நசிர்அகமது இடமாற்றம் செய்யப்பட்டு ஊட்டியில் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஊட்டியில் பணியாற்றி வரும்சண்முகம், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின், மூன்றாவது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
Comments
Story first published: Friday, December 23, 2005, 5:30 [IST]