சிறையில் பரவும் எய்ட்ஸ்: 4 கைதிகள் பலி
கோவை:
கோவை சிறையில் கடந்த 20 நாட்களில் எய்ட்ஸ் நோய்க்கு 4 கைதிகள் பலியாகியுள்ளனர். சிறையில் இன்னும் 66 கைதிகள்எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை மத்திய சிறையில் 2,700 கைதிகள் உள்ளனர். இதில் 1,400 பேர் தண்டனைக் கைதிகள், 1,100 பேர் விசாரணை கைதிகள்,சமீபகாலமாக கைதிகள் அடுத்தடுத்து எய்ட்ஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர்.கடந்த 20 நாட்களில் மட்டும் கோவை இந்திரா நகரைச் சேர்ந்த நாகரத்தினம்(வயது 30), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தராஜேந்திரன் (வயது 32), பவானியைச் சேர்ந்த பழனி (வயது 35) மற்றும் வரதன் (வயது 40) ஆகியோர் இறந்துள்ளனர். இவர்கள்அனைவரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் போது கைதிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் எய்ட்ஸ்சோதனை செய்யப்படுவதில்லை. இதனால் சிறைக்கு வந்தபின் கைதிக்கு எயட்ஸ் தாக்கியதா? அல்லது சிறைக்கு வரும் முன்பேஎய்ட்ஸ் இருந்ததா? என்பது புரியாத புதிராக உள்ளது.
கைதிகளில் பலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதால் இந்த நோய் பரவி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் 66கைதிகளுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தகவல் பரவியுள்ளதால் சிறைக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகரத்தினம் என்ற கைதி எய்ட்ஸால் இறந்துவிட்டதாக கருதப்பட்டாலும் இதை அவரது தம்பி நாகமணி (வயது 27)மறுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறிய போது, திருட்டு வழக்கு தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் என் அண்ணனை தேடிய போது அவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டார். பிறகு சென்னை சிறையிலேயே அடைக்ப்பட்டுவிட்டார்.
அவரை கோவை சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர். நாகரத்தினம் திடகாத்திரமானவர். அவரை தீபாவளி நாளன்று சிறையில்சென்று பார்த்தேன் நன்றாகத் தான் இருந்தார். அதற்குள் எய்ட்ஸ் வந்து இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதில் ஏதோ மர்மம்இருக்கிறது எள்றார்.
இது குறித்து கோவை சிறைத்துறை டிஐஜி கூறுகையில், கோவை சிறையில் எய்ட்ஸ் பரவ வாய்ப்பு இல்லை. சில கைதிகள் உள்ளேவரும் போதே எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு வந்த பிறகு சில மாதங்களில் பலியாகி விடுகின்றனர். இதற்குநாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications