ரேஷன் அரிசி கடத்தினால் குண்டாஸ்: அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

கோவை:

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையை அடுத்த சின்னத்தடாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் உணவு மற்றும்கூட்டுறவுத்துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்ட பிறகு, சோமையனூரிலுள்ள நஞ்சுண்டாபுரம்வேளாண்மை கூட்டுறவு வங்கியில் திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு பயிர்கடன், நகைக்கடன், பாதுகாப்பு பெட்டக வசதி குறித்தவிபரங்களை கேட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கள்ள மார்க்கெட்டில் விற்பவர்கள் மீதுசட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிக்க காவல்துறை, வருவாய் துறை மற்றும்கூட்டுறவுத்துறைகளில் பறக்கும் படை இயங்கி வருகிறது.

மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிமை பொருட்களை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதற்கான அரசு உத்தரவுவிரைவில் வெளியிடப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+