இது சர்வாதிகார ஆட்சியல்ல, காட்சி: ஸ்டாலின்
தூத்துக்குடி:
சேது சமுத்திரத் திட்டம் திமுக கூட்டணி கட்சிகளால் தமிழகத்துக்கு கிடைத்த பெருமைரியத் திட்டம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
தூத்துக்குடியில் நடந்த அக் பொதுக் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் இன்றைக்கு நடப்பது சர்வாதிகார ஆட்சி அல்ல. சர்வாதிகார காட்சி என்றே சொல்லலாம்.திமுக ஆட்சியில் போட்ட திட்டங்களை கூட நிறைவேற்ற முன் வராமல் பல திட்டங்களை கிடப்பில் போட்டதும் பலவற்றை ரத்துசெய்ததும் தான் அதிமுக ஆட்சியின் லட்சணம். பெண்களுக்கு கருணாநிதியால் வழங்கப்பட்ட திருமண உதவி திட்டம் கூடநிறுத்தப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களின் 154 ஆண்டு கால கனவுத் திட்டம். திமுக கூட்டணி கட்சிகள் போராடி வெற்றி கிடைத்துள்ளது.இதனால் ஒட்டு மொத்த தமிழகம் மற்றும் இந்தியாவுக்கே பெருமை சேர்த்து உள்ளது. அப்படிபட்ட திட்டத்தை ஜெயலலிதாஆதரிக்காவிட்டாலும் விமர்சனம் செய்யாமலாவது இருக்கலாம்.
தமிழ் செம்மொழி என அங்கீகாரம் கிடைக்க உங்களால் உருவாக்கப்பட்ட மத்திய ஆட்சி தான் காரணம். எனவே தமிழகத்திலும்திமுக ஆட்சி இருந்தால் கூடுதலாக நன்மை கிடைக்கும். சென்னை மாநகர மேயரை போலீஸ் நினைத்தால் உடனடியாக கைதுசெய்ய முடியும். ஆனால் இதில் தயக்கம் காட்டுவதற்கு ஏதோ காரணம் உள்ளது. மக்கள் போற்றும் சங்கராச்சாரியாரை கூட வெளிமாநிலத்திற்கு சென்று கைது செய்யவில்லையா?.
வெள்ள நிவாரண நெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என்று ஜெயலலிதா நாடகம் நடத்திவருகிறார். மக்கள் தரும் தீர்ப்புக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.