அரசு ஊழியர்,மனைவி- 3 குழந்தைகள் தற்கொலை
சேலம்:
சேலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் தனது குடும்பத்தினர் 4 பேருடன் தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்காடு சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் புஷ்பநாதன்(வயது 40). இவர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார்.இவருக்கு அலமேலு என்ற மனைவி, மலர்விழி, ரம்யர் ஆகிய மகள்கள், மாரியப்பன் என்ற மகன் ஆகியோர் இருந்தனர்.தன்னுடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்களிடம் ரூ. 1 லட்சம் வரைகடன் வாங்கியுள்ளார் புஷ்பநாதன். கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார் புஷ்பநாதன்.
இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள புஷ்பநாதன் முடிவெடுத்தார். அதற்கு குடும்பத்தினரும் சம்மதித்துள்ளனர்.இதையடுத்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்தை வாங்கிக் கொண்டு புஷ்பநாதன் வீட்டுக்கு வந்துள்ளார்.
மனைவி, குழந்தைகளுக்குப் பூச்சி மருந்தைக் கொடுத்த புஷ்பநாதன் தானும் அதை சாப்பிடுள்ளார். பின்னர் தூக்குப் போட்டுக்கொண்டு இறந்தார். அவரது மனைவியும், குழந்தைகளும் இறந்து விட்டனர்.
நான்கு நாட்களாக புஷ்பநாதனின் வீடு திறக்கப்படாமலும், துர்நிாற்றம் வீசியதாலும் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்கள்போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
ஹஸ்தம்பட்டி போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஐந்து பேரும் இறந்து கிடந்தனர்.