For Quick Alerts
For Daily Alerts
Just In
திலகவதிக்கு சாகித்ய அகாடமி விருது
சென்னை:
தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி திலகவதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
மாநில அளவில் தலை சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய சாகித்ய அகாடமி விருது வழங்கி கெளரவித்துவருகிறது. சாகித்ய அகாடமி விருது வழங்கும் கமிட்டியின் கூட்டம் கோவாவில் நடந்தது. இதில் விருது பெறுவோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
இதில் தமிழில் சிறந்த எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது திலகவதிக்குக் கிடைத்துள்ளது. அவர் எழுதிய கல்மரம் என்றநிாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நாவலை அவர் கடந்த 2001ம் ஆண்டு எழுதியிருந்தார்.
ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் ஆகியவை அடங்கியது சாகித்ய அகாடமி விருது. விருது கிடைத்திருப்பது குறித்துதிலகவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Friday, December 23, 2005, 5:30 [IST]