போலி வாக்காளர்: முன்னாள் திமுக அமைச்சர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக போலி வாக்காளர்களைச் சேர்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்துநடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளரும்,முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான சுரேஷ் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் சேவியர் மனோகரன் மீது நாகர்கோவில் ஆர்.டி.ஓ புத்தி சிகாமணிபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி முளகு மூடு பஞ்சாயத்து தலைவர் நிர்மலா தேவி, குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர்சிவ குற்றாலம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ அன்பழன், போலி வாக்காளர் பிரச்சினை தொடர்பாக வழக்கு எதுவும்தொடரப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications