போலிகளை சேர்த்தவர்களுக்கு என்ன தண்டனை?
சென்னை:
போலி வாக்காளர்களைச் சேர்த்த குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்களுக்கு 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனைகிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 13 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்க்க ஒட்டுமொத்தமாக மனு கொடுத்தவர்கள் மீது வழக்குத் தொடரதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனு கொடுத்தவர்கள் மீது ஆங்காங்கே வழக்கு தொடரப்பட்டுவருகிறது.இதில் பெரும்பாலும் அதிமுகவினர்தான் சிக்கியுள்ளனர். இருப்பினும் திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மற்றபிரமுகர்கள் மீதும் வழக்குகள் பாய்ந்து வருகின்றன.
அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பி.சி.ராமசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏராளமானஅதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
இதேபோல திமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், பாஜகவைச் சேர்ந்த பிரமுகர்களும் வழக்குகளில்சிக்கியுள்ளனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம்கேட்டபோது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 31ன்படி, போலியான வாக்காளர்களைச் சேர்க்க முயல்வது குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும். அதிமுக, திமுக, பாமக, மதிமுக, பாஜக ஆகியகட்சிகளைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் போலி வாக்காளர்களை சேர்க்க மனு கொடுத்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்வது வரும் 26ம் தேதிக்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கிறோம். போலி வாக்காளர்கள் இல்லாதபட்டியலை வெளியிடுவதே எங்களது முக்கிய நோக்கம். மேலும், போலியான வாக்காளர்களை இனிமேல் யாரும் சேர்க்கமுன்வரக் கூடாது என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமையும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications