மெயில் மிரட்டல்: 3 பேரிடம் போலீஸ் விசாரணை
திருநெல்வேலி:
நாடாளுமன்றத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லையில் போலீஸ்விசாரணை சூடு பிடித்துள்ளது.
தனிப்படை போலீசாரிடம் மேலப்பாளையத்தை சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக பாளை கல்லூரி மாணவர்களின்படங்களை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். சிக்கியுள்ள 3 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகிறது.கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்ட விவகாரம் நாடு முழுவதும்பரபரப்பை ஏற்படுத்தியது.
மிரட்டல் இ-மெயில் பாளையில் உள்ள இன்டர்நெட் சென்டரில் இருந்து அனுப்பப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்துடில்லி, சென்னை போலீசாரின் கவனம் பாளை மீது திரும்பியது. டில்லி, சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பாளையில்உள்ள குறிப்பிட்ட இன்டர்நெட் சென்டர், ஆன்லைன் சென்டர், செல் போன் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனைநடத்தி சீல் வைத்தனர்.
அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி சோதனைக்காக டில்லி மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பினர். குறிப்பிட்ட இன்டர்நெட்சென்டரில் இ-மெயில் அனுப்பப்பட்ட நேரத்தில் அந்த டெர்மினலில் இருந்து பணியாற்றிய நபரை சென்னை சைபர் கிரைம்பிரிவு போலீசார் கம்ப்யூட்டரில் வரைந்துள்ளனர்.
அந்த அடையாளத்தில் உள்ள நபரை நெல்லையில் 9 தனிப்படை போலீசார் குறிவைத்து தேடி வருகின்றனர்.