இன்று எம்.ஜி.ஆர். நினைவு நாள்
சென்னை:
மறைந்த மாஜி முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 18வது நினைவு தினம் இன்றுஅனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்துகிறார்.
எம்.ஜி.ஆர். மறைந்து சனிக்கிழமையுடன் 18 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும்இரங்கல் கூட்டங்கள், அமைதி ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினர் இன்று அஞ்சலிசெலுத்துகின்றனர்.
இதேபோல எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவரும் முன்னாள்மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த், அக் கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்துகின்றனர்.
அரசியலில் நுழைந்த பின் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அவரது சமாதியில் விஜய்காந்த் அஞ்சலி செலுத்துவது இதுவேமுதல் முறை.












Click it and Unblock the Notifications