காங். சார்பில் சுனாமி நினைவு நாள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுனாமி தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு முடிவடைவதையொட்டி வருகிற திங்கள்கிழமை சுனாமியால் பாதிக்கப்பட்டமாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிக்களுக்கு ஏற்பாடு செய்யும் படி அக்கட்சியினருக்கு கட்சித் தலைவர்ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுனாமி அலைத் தாக்குதல் நடந்து, ஆயிரக்கணக்கானவர்கள்பலியான துயரச் சம்பவம் நடந்து 26ம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது.
எனவே இந்த சோக நினைவு நாளையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டனம், கன்னியாகுமரி,ராமநாதபுரம் உள்ளிட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அஞ்சலிகள், மெளன ஊர்வலங்கள் உள்ளிட்டவற்றுக்குகாங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களது துயரத்தில் பங்கு கொண்டு, ஆறுதல் கூற வேண்டும் என்றுஅவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications