போலிகளை சேர்த்தவர்களுக்கு ஓராண்டு வரை சிறை- தேர்தல் கமிஷன்
சென்னை:
வாக்காளர் பட்டியலில் போலிகளை சேர்த்தவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த மார்ச் மாதம் நடந்த போது 193 தொகுதிகளில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்பெயர்களும் சேர்க்கப்பட்டன.அப்போது ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் போட்டி போட்டு நிறைய பெயர்களை எழுதிக் கொடுத்தனர். மொத்தம் 19 லட்சம்புதிய வாக்காளர்களை சேர்க்க கோரி பட்டியல் தந்ததால் தேர்தல் கமிஷன் அதை வீடு வீடாக சென்று சரி பார்த்தது. இதில் 13லட்சம் மனுக்கள் போலி என்று கண்டு பிடிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
போலி பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு கொடுத்த கட்சிக்காரர்கள் மீது தற்போது நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டு வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 31வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாலும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் தான் சிக்கி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் போலி மனு கொடுத்தவர்களுக்கு 3 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறை தண்டனைவிதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அபராதமும் கூடுதலாக விதிக்கவும் இதில் வழி வகை உள்ளது.
எனவே போலி மனு கொடுத்தவர்கள் மீது பாராபட்சமின்றி வழக்கு தொடரப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.