சர்ச்சுகளில் அன்னதானம்: ஜெ. தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிறிஸ்தவ பேராலயங்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
திருக்கோவில் அன்னதானத் திட்டம், தர்ஹாகாக்களில் அன்னதானத் திட்டத்தைத் தொடர்ந்து தற்போது கிறிஸ்தவபேராலயங்களிலும் அன்னதானத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.கிறிஸ்துமஸ் தினமான இன்று முதல் தமிழகத்தில் 7 பேராலயங்களில் முதல் கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா நகர் நடுவங்கரையில் உள்ள சிஸ்லோம் தேவாலயத்தில் முதல்வர் ஜெயலலிதா அன்னதானத் திட்டத்தைத்தொடங்கி வைத்தார்.
அங்கு உணவு பரிமாறி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. பேராலயத்திற்கு வந்த ஜெயலலிதாவை கிறிஸ்துமஸ்தாத்தா வேடம் அணிந்த ஏராளமானோர் வரிசையாக நின்று வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications