இலங்கையில் தமிழ் எம்பி பரராஜசிங்கம் சுட்டுக் கொலை
கொழும்பு:
இலங்கையில் தமிழ் எம்பி ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டணி எம்பியானஇவரை கருணா கும்பல் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
71 வயதான பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்க மட்டக்களப்பில் உள்ள புனிதமைக்கேல் சர்ச்சுக்கு சென்றார். அவருடன் அவரது மனைவியும் சென்றிருந்தார்.அவர்கள் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த போது சிலர் சர்ச்சுக்குள் நுழைந்து ஜோசப் பரராஜசிங்கத்தையும் அவரதுமனைவியையும் நோக்கி சரமாரியாக சுட்டனர். எம்பியின் பாதுகாப்புக்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி சுட்டனர்.இதையடுத்து தேவாலயத்தில் சுப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பரராஜசிங்கம் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. எம்பியின் மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில்மேலும் 7 பேரும் காயமடைந்தனர்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் பரராஜசிங்கம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
கருணா கோஷ்டியினர் தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.