இல்லாத கட்சிக்கு 2 கோஷ்டி: அப்சட்டான லாலு
சென்னை:
சென்னைக்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு, தமிழக ராஷ்டிரிய ஜனதாதளத்தின் 2 கோஷ்டியினர்தனித் தனியாக வரவேற்பு கொடுத்ததால் லாலு நொந்து போய் கடுப்பானார்.
தேசிய அளவில் உள்ள பல கட்சிகள் தமிழகத்திலும் உள்ளன. காங்கிரஸ், ஜனதாதளம், கம்யூனிஸ்டுகள், ராஷ்டிரிய ஜனதாதளம்என இந்த வரிசை நீளம். இதில் உயிருடன் இருப்பது காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் மட்டும் தான்.இந்தக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல் அகில உலகப் புகழ் பெற்றது. பெரிய கட்சி, ரொம்ப காலமாக இருக்கும்கட்சியில் கோஷ்டிகள் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் வெறும் நிர்வாகிகள் மட்டுமே உள்ள ராஷ்டிரிய ஜனததாளம்,ஜனதாதளம் போன்ற கட்சிகளிலும் கோஷ்டிப் பூசல் கொடி கட்டிப் பறப்பது தான் இங்கே மேட்டர்!
இந்த நிலையில், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் சென்னைக்குவந்தார். சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவருக்குவிமான நிலையத்தில் ராஷ்டிரிய ஜனதாதள தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
எப்படி? இரண்டு கோஷ்டிகளாக வந்து, கேசவன் என்பவரது தலைமையில் ஒரு அணியும், ராமலிங்கம் என்பவரது தலைமையில்இன்னொரு கோஷ்டியும் திரளான தொண்டர்களுடன் திரண்டு வந்து லாலுவை வரவேற்றனர்.
இந்த பலத்த வரவேற்பில் பயந்து போன லாலு, போடப்பட்ட மாலைகளை வரவழைத்துக் கொண்ட புன்னகையுடனும், லேசானகடுப்புடனும் ஏற்றுக் கொண்டு வேகம் வேகமாக நகர்ந்து போய் விட்டார். முன்னதாக ரயில்பெட்டித் தொழிற்சாலை விழாவில்கலந்து கொண்ட லாலு பேச்சை தொடங்கும் முன்பு வணக்கம் என தமிழில் ஆரம்பித்தார்.
பின்னர் டக்கென்று இந்திக்குத் தாவி விட்டார். தனது பேச்சை முழுவதுமாக இந்தியிலேயே பேசி முடித்தார். அவரது பேச்சைஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ யாரும் மொழிபெயர்க்கவில்லை.
இதனால் லாலு என்ன பேசுகிறார் என்பதையே புரிந்து கொள்ள முடியாமல் விழாவுக்கு வந்திருந்த பலர் அவரை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications