நாளை சுனாமி நினைவு தினம்: தமிழகம் அஞ்சலி
கடலூர்:
சுனாமி தாக்குதல் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைவதையொட்டி கடலூரில் நாளை மீன்பிடிக்கும் பணி முற்றிலும்நிறுத்தப்படுகிறது.
அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள் சார்பில் பிரமாண்டமான அமைதிப் பேரணியும் நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் நடத்திய பயங்கர தாக்குதலில்பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின.
கடலூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்கள்தான் இந்தத் தாக்குதலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந் நிலையில் சுனாமித் தாக்குதல் நடந்த ஓராண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம்முழுவதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை மீனவர்கள் கடலுக்குள்செல்லாமல், மீன்பிடிப்பில் ஈடுபடாமல் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான அமைதி ஊர்வலத்திற்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications