வீடுகளை விட்டு வெளியேறிய கடலோர மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஆண்டு வந்ததைப் போல இந்த முறையும் சுனாமி வந்து விடுமோ என்ற பீதியில் சென்னை நகரின் கடலோரப் பகுதிகளில்வசிக்கும் ஏராளமானோர் இன்று தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் சுனாமி பேரலைகள் நடத்திய பெரும் தாக்குதலில், தமிழக கடலோரப் பகுதிகள் பெரும் சீரழிவைசந்தித்தன. சென்னை நகரும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. 200 பேருக்கும் மேல் இதில் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர்வீடுகளை இழந்தனர்.

வீடு, வாசல், உடமைகள், சொந்தங்களை இழந்த சென்னை கடலோரப் பகுதிவாசிகள் கடந்த ஆண்டு நடந்த அந்த துயரச்சம்பவத்தை இன்னும் மறக்கவில்லை. இதற்கிடையே இன்றும் சுனாமி வரும் என பரவிய புரளியால் நேற்று காலை முதலேசீனிவாசபுரம், திருவான்மியூர், கொட்டிவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கடலுக்கு அருகில் வசிக்கும் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விட்டனர்.

மேலும் பலர் கடந்த ஆண்டு நடந்த துயரச் சம்பவத்தை மனதில் அசைபோட்டபடி கடற்கரை மணலில் கூட்டம் கூட்டமாகஅமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்குப் போகாமல் படகுகளை நிறுத்தி விட்டு சோகமாகவும், கடந்த ஆண்டின் கொடியநினைவுகளுடனும் கடற்கரை மணல் வெளியில் உலாவிக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+