மன்னார்குடி நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சரண்டர்

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் பெரியகுடி சிவன் கோவிலில் நவரத்தினக் கற்களை திருடியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மன்னார்குடிநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.

மன்னார்குடி அருகே உள்ள பெரியகுடி அகஸ்தீஸ்வரர் கோவிலில், சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த நவரத்தின கற்களைஜெயேந்திரர் எடுத்துச் சென்று விட்டதாக அவர் மீது மன்னார்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்ற கிருஷ்ணன் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்துசென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய ஜெயேந்திரர் உள்ளிட்ட 8 பேரும் முன் ஜாமீன் கோரினர்.

அவர்களது கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், மன்னார்குடி நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம் எனஅறிவித்தது.

இதையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்ரமணியன், ராமச்சந்திரன், சந்திரசேகர், வெங்கடராஜுலு, முத்து குருக்கள்,சேதுராமன், சோமசுந்தர குருக்கள்

ஆகியோர் கடந்த 22ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெற்றனர்.

லிக்னிசந்த் என்பவர் 23ம் தேதி சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.

இந் நிலையில் ஜெயேந்திரர் இன்று காலை மன்னார்குடிக்கு வந்தார். நேராக நீதிமன்றம் சென்ற அவர் நீதிபதி முரளிதரன்முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டபடி ரொக்க ஜாமீன் மற்றும் இரு நபர் ஜாமீனை செலுத்தியஜெயேந்திரர் முன் ஜாமீன் உத்தரவைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து வடவூர் சென்றார்.

அங்குள்ள வேத பாடசாலையைப் பார்வையிட்ட ஜெயேந்திரர் பின்னர் நீடாமங்கலம் வழியாக கலவையில் உள்ள சங்கரமடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+