ராஜபக்ஷே வருகை: பிரதமர், ஜெவுடன் சந்திப்பு
டெல்லி:
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியா வருகிறார்.
அதிபராகப் பதவியேற்ற பின் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது. நான்கு நாள் பயணமாக இந்தியா வரும்அவர் விடுதலைப் புலிகள் விவகாரம், அமைதிப் பேச்சு குறித்து ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங்குடன்ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து சென்னை வரும் ராஜபக்ஷே முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
திருப்பி அனுப்பப்பட்ட அமைச்சர்:
இதற்கிடையே காலாவதியான விசாவுடன் இந்தியாவுக்கு வந்த இலங்கை அமைச்சரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில்அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இலங்கைக்கே திருப்பி அனுப்பினர்.
இலங்கை அரசில் மறுவாழ்வுத் துறை அமைச்சராக இருப்பவர் அமீர் அலி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்குவருவதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கு அவரது விசாவை அதிகாரிகள் பரிசோதித்தனர். ஆனால் அவர்வைத்திருந்த விசா கடந்த 21ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அலியை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறிய அதிகாரிகள் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட்டனர். இருப்பினும் அமீருடன் வந்த ரிஷாத் பக்ருதீன் என்பவர் சரியான விசா வைத்திருந்ததால் அவரை மட்டும்அதிகாரிகள் இந்தியாவுக்குள் சுற்றுப் பயணம் செய்ய அனுமதித்தனர்.