காஷ்மீர், பாகிஸ்தானில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ - இஸ்லாமாபாத்:
காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் நேற்று மீண்டும் நிலநடுக்கம்ஏற்பட்டது.பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.8 என்ற அளவுக்குப் பதிவானது.
கடந்த அக்டோபர் 8ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு சுமார் 1 லட்சம் பேர் பலியான நிலையில் அந்தப் பகுதிகளில்தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டவண்ணம் உள்ளன.
நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் அலறிக் கொண்டு வீடுகளை விட்டு ஓடினர்.
ஸ்ரீநகரிலும், பாகிஸ்தானில் பெஷாவர், இஸ்லாமாபாத், வட மேற்கு எல்லைப் புற மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளகாஷ்மீர் பகுதியான முஸாபராபாத், மன்செரா, பாலாகோட், அபோடாபாத் ஆகிய பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.












Click it and Unblock the Notifications