ஆந்திர-சென்னை பஸ்சில் கஞ்சா: 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வரும் சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் சொகுசு பஸ்சில் கஞ்சா கடத்துவதாக வந்த தகவலை அடுத்து கும்மிடிப்பூண்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் பைபாஸ் சாலையில் பஸ்சை மடக்கி சோதனைமேற்கொண்டார்கள்.
அப்போது பஸ்சுக்குள் ஒரு சிறிய மூட்டை மற்றும் 5 சூட்கேஸ்களில் 60 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை கடத்தி வந்த மதுரை உசிலம்பட்டி அருகே உள்ளபோலியாம்பேட்டையை சேர்ந்த ஒச்சப்பன் (வயது 40), கூடலூரை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 22), ராஜேந்திரன் (வயது 33) ஆகிய 3பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிக்சாகுளம் மலைப் பகுதியில் இருந்து கஞ்சா மூட்டைகள் மதுரைக்குகடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.