போலி: திமுக, பாமக மா.செக்கள் மீது வழக்கு
சென்னை:
போலி வாக்காளர்களைச் சேர்த்தது தொடர்பாக கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர்கள் மீது இன்று வழக்குகள்பதிவு செய்யப்பட்டன.
போலி வாக்காளர்களைச் சேர்த்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல்கமிஷனின் இந்த நடவடிக்கையில் அதிமுகவினரே அதிகமாக சிக்கி வருகின்றனர்.இதுவரை 6 அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அதேபோல திமுகவைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந் நிலையில் கன்னியாகுமரிமாவட்ட திமுக செயலாளர் சுரேஷ் ராஜன், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் மீதுஇன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அன்பரசன் மீது 5 மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் அறிவழகன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் அதிமுகவைச் சேர்ந்த வீட்டு வசதி வாரியத் தலைவர் அருண்மொழித்தேவன் மீது சிதம்பரம் தொகுதியில் போலிவாக்காளர்களைச் சேர்ந்ததாக மேலும் ஒரு வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications