சென்னையில் இனி 19 நாளில் பாஸ்போர்ட்
சென்னை:
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த 19 நாட்களில் இனிமேல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என சென்னை மண்டல பாஸ்போர்ட்அதிகாரியான சுமதி ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,சென்னை மண்டலத்திற்கு உட்பட்டவர்கள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த 19 நாட்களில் இனி பாஸ்போர்ட் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள சில காவல் நிலையங்கள் மூலம் விண்ணப்பித்தால் தாமதம் இன்றி பாஸ்போர்ட் வீடு தேடி வரும்.
மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு 30 சிறப்பு தொலைபேசி எண்களை வழங்கவுள்ளது.இந்த தொலைபேசி எண்களுக்கு போன் செய்து, தங்களது பாஸ்போர்ட் நிலவரம் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்துசந்தேகங்களையும் பொதுமக்கள் கேட்டறிந்து கொள்ளலாம்.
பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் போதிய அளவுக்கு விண்ணப்பங்கள் கையிருப்பில்உள்ளன என்றார் சுமதி.