பாமகவின் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து
சென்னை:
ஆண்டுதோறும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் பண்ணை வீட்டில் கொண்டாடப்படும் புத்தாண்டுநிகழ்ச்சிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் பாமக சார்பில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12மணி 1நிமிடத்திற்கு, கட்சியின் நிறுவனத் தலைவருக்கு கட்சியினர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி கூறுவதும், அனைவரும்வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதும் வழக்கமாக நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு மழையினால் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தாலும், எம்.ஜி.ஆர். நகர், வியாசர்பாடி ஆகியபகுதிகளில் 48 பேர் உயிரிழந்த காரணத்தாலும், தமிழகம் முழுவதும் நிலவும் மழை, வெள்ள சோகத்தாலும், வழக்கமாககொண்டாடப்படும் புத்தாண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.
இதற்குப் பதில் டிசம்பர் 31ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம்தோட்டம், மாங்கனி அரங்கத்தில் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும்.
இக் கூட்டத்தில் தமிழக, புதுவை மாநில பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழுஉறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இக் கூட்டத்திற்குப் பின்னர் மாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் மணி.












Click it and Unblock the Notifications